ஆனாலும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த விடயங்களில் மாற்றங்கள் எதுவுமே ஏற்படாது எனவும் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குல நாடுகளின் நலன்சார்ந்தே ஈழத்தமிழர் விவகாரத்தை மைத்திரி- ரணில் அரசாங்கம் கையாளும் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மாத இறுதியில் நேபாளத்தில் நடைபெறவுள்ள பிம்ஸ்ரெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அங்கு பயணம் செய்யவுள்ளார்.
இந்தியப் பிராமர் நரேந்திர மோடியும் நேபாளத்திற்குச் செல்லவுள்ளார். மாநாடு முடிவடைந்ததும் இருவரும் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடுவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் பிம்ஸ்ரெக் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்து சென்ற பின்னர் அமெரிக்கக் கப்பல் ஒன்று தொள்ளாயிரம் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சென்ற வெ்ள்ளிக்கிழமை திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பதினொராம் திகதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
புதுடில்லியில் பலவேறு சந்திப்புக்களிலும் அவர் ஈடுபடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணாவ்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் மாகாண சபைகள் தேர்தல் நடைபெற்று, அடுத்த ஆண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வு மேற்கொள்வதாக கூர்மைச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆகவே இவற்றை அடிப்படையாக வைத்தே இந்தியா. ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை மீதான தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.