இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதிபதியாக பதவியேற்கும் வகையில் நேற்றுப் புதன்கிழமை அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
மன்னார் மாவட்ட நீதவானாக பிரபாகரன் நியமனம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் பலவற்றை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அத்துடன் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து வழக்கு விசாரனைகளின்போது நேரடியாகவே எச்சரிக்கையும் செய்திருந்தார்.
மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசுக்குச் சொந்தமான சதொச விற்பனை நிறுவன கட்டடம் ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட போர்க்கால மனிதப் புதைக்குழி தொடர்பாகவும் அவர் கடுமையான உத்தரவுகளை இலங்கைப் பொலிஸாருக்குப் பிறப்பித்திருந்தார்.
இதன் காரணமாக கொழும்பில் உள்ள இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மன்னாரில் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும், அதனடிப்படையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்டத்தரணி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் கூறினார்.
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழு வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள நீதிமன்ற விவகாரங்களில் இனவாத கண்ணோட்டத்துடன் செயற்பட்டு வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.