வெல்லாவெளிப் பிரதேசம் கடந்த கால போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று, அதுமாத்திரமல்ல இப்பகுதியில் இருந்து மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர்.
உயிர்கள் பலவற்றைத் தியாம் செய்த இப்பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலங்களில் பிரச்சாரம் செய்ய வரும் அரசியல்வாதிகள், மக்களின் அன்றாட பிரச்சினைகளை்க் கூட தீர்த்துவைப்பதற்கு முயற்சிப்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே, இப்பகுதிக்குச் செல்வதற்கான பிரதான பாதையை புனரமைச் செய்வதுடன், சேதமடைந்து காணப்படும் பாலத்தையும் புனரமைப்புச் செய்ய அதிகாரிகள் அரசியல் வாதிகள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாதை புனரமைப்புச் செய்யப்பட்டால் நெற்செய்கையில் ஈடுபட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.