கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வெல்லாவெளி மருங்கையடிப் பாலம் புனரமப்புச் செய்யப்படவில்லை- வேளாண்மை பாதிப்பு என முறைப்பாடு

ஐநுாறு ஏக்கர் நெற்காணிகள் நாசம் என மக்கள் கவலை
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 31 09:59
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:07
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
நூற்றுக் கணக்கான விவசாயிகள் பயன்படுத்தும் பாதை புனரமைக்கப்படாமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக வெல்லாவெளி கண்டத்தின் விவசாய அமைப்புத் தலைவர் க.சிவப்பிரகாசம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மருங்கையடிப் பகுதியில் சேதமடைந்துள்ள பாலம் புனரமைப்புச் செய்யப்படவில்லை. இதனால் சுமார் ஐநுாறு ஏக்கர் நெற்காணிகளில் நீண்டகாலமாக வேளாண்மை செய்யப்படாமல் உள்ளதாக அவர் கவலை வெளியிட்டார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் உட்பட இலங்கை அரசின் அமைச்சர்கள் என பலர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனாலும் பாலம் இதுவரை புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளதாகவும் சிவப்பிரகாசம் கூர்மை செய்தித் தளத்திற்கு கூறினார்.
 
வெல்லாவெளிப் பிரதேசம் கடந்த கால போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று, அதுமாத்திரமல்ல இப்பகுதியில் இருந்து மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர்.

உயிர்கள் பலவற்றைத் தியாம் செய்த இப்பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.

நாடாளுமன்ற மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலங்களில் பிரச்சாரம் செய்ய வரும் அரசியல்வாதிகள், மக்களின் அன்றாட பிரச்சினைகளை்க் கூட தீர்த்துவைப்பதற்கு முயற்சிப்பதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எனவே, இப்பகுதிக்குச் செல்வதற்கான பிரதான பாதையை புனரமைச் செய்வதுடன், சேதமடைந்து காணப்படும் பாலத்தையும் புனரமைப்புச் செய்ய அதிகாரிகள் அரசியல் வாதிகள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாதை புனரமைப்புச் செய்யப்பட்டால் நெற்செய்கையில் ஈடுபட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.