இந்த நிலையிலேயே அனுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு பேரூந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த இலங்கை இராணுவக் குடும்பங்களை நினைவுகூர்ந்து சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொண்டார்.
அங்கு ஊடகவியலாளர்களின் கோள்விகளுக்குப் பதிலளித்த அவர், கோடடபய ராஜபக்சவுக்கு மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மஹிந்த வலியுறுத்தியுள்ளார்.
கோட்டபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் அமெரிக்கா காய் நகர்த்துகின்றதா என கூர்மை செய்தித் தளத்தில் ஏலவே செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருந்தது.
அதேவேளை. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 19 ஆவது திருத்தச் சட்டம் அதற்கு தடையாக இருக்காது என்றும் அவர் இந்த நிகழ்வில் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபய ராஜபக்ச நியமிக்கப்படுவதில் பிரச்சினை இல்லையென மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஏலவே கூறியிருந்தார்.
அதேவேளை. கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளமைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதற்குச் சட்டப் பிரச்சினை இல்லையென்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் 19 ஆவது திருத்தச் சட்டம் தனக்கு தடையாக அமையாது என மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கலாம் என்றும் கட்சியின் உயா்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இதனாலேயே அவரை புதுடில்லிக்கு இந்திய மத்திய அரசு அழைத்தது என்றும் கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேறு சில உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த முனைப்புக் காட்டிவரும் நிலையில், மஹிந்த ராஜபக்சவின் அரசியல் அணிக்கும் அந்த நாடுகள் மறைமுகமாக ஆதரவு வழங்குவதாகவே அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி சென்ற ஐந்தாம் திகதி புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்கத் தூதரகம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்புத் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன.