அதனையடுத்து பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதனை ஆராய்ந்தது.
குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட நேர விவாதத்தின் பின்னர் ஒற்றையாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களம் கால அவகாசம் கோரியது. அதனையடுத்து மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நாளை வரை அமர்வை ஒத்திவைத்துள்ளது.
மனு மீதான பாிசீலனை நடைபெற்றபோது இன்று காலை முதல் கொழும்பு உயா் நீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கட்சிகளின் ஆதரவாளர்கள், உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அங்கு குழுமியிருந்ததால் நீதிமன்ற வளாகத்தில் இலங்கைப் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கட்சி ஆதரவாளர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டபோது அங்கு முறுகல் நிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.