மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி தொடர்சியாக மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையிலும் இடம்பெற்று வருகின்றது.
இதுவரை இடம்பெற்ற மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளின் போது 232 க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 அதிகமான மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடையாளப்படுத்தப்பட்டு இன்னமும் அப்புறப்படுத்தப்படாத மேலதிக மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் முன் அறிவித்தல் இன்றி நேற்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் இரு வாரங்களுக்கு திடீர் என அகழ்வு இடை நிறுத்தப்பட்டுள்ளது.