எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம், ஐந்தாம், ஆறாம் திகதிகளில் மீண்டும் இடையீட்டு மனுக்கள் மற்றும் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் எனவும் உயர் நீ்திமன்றம் கூறியுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரிவித்து 20இற்கும் அதிகமான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அரசியல் கட்சிகள் சார்பிலும் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் சிலர் சார்பிலும் இந்த 20இற்கும் அதிகமான மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்று மாலை வரை அதில் 13 மனுக்கள் விசாரணைகளுக்காக தயார் நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டிருந்தன. இதில் 10 மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று இடம்பெற்றதை அடுத்து ஏனைய மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றன.
இன்று இடம்பெற்ற நீண்ட நேர விவாதத்தின் பின்னர் இந்த அறிவிப்பு நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி என ரணில் விக்கிரமசிங்க தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை நாளை புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும் என பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 8.30க்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் பெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.