இலங்கை அரசியல் நெருக்கடி நீடிக்கின்றது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான மனுக்கள் மீது இரண்டாவது நாளாகவும் விசாரணை

பிரதமர், அமைச்சரவை இல்லாத நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது - 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
பதிப்பு: 2018 டிச. 05 11:13
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 17:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரும் மனு மீதான விசாரணை ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் நளின் பெரேர மற்றும் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னதாக கலைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்பில் ஜனாதிபதி்க்கு இல்லை என்று மனுதாரர்கள் சார்பில் முன்லையான சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
 
இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதிவாதிகள் சார்பில் மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேர் உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணை நடைபெறுகின்றது.

மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அவருடை 49 அமைச்சர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துமாறு லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிந்த தரப்பு சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி நண்பகல் ஒரு மணி வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்தார்.