இந்த மனுக்கள் மீதான விசாரணையில் தலையீடு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதிவாதிகள் சார்பில் மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேர் உயர் நீதிமன்றத்தில் எதிர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் விசாரணை நடைபெறுகின்றது.
மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அவருடை 49 அமைச்சர்களும் தொடர்ந்து பதவி வகிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்கள் 122 பேர் இணைந்து கடந்த 23 ஆம் திகதி தாக்கல் செய்த ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும் என வலியுறுத்துமாறு லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகிந்த தரப்பு சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி நண்பகல் ஒரு மணி வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்தார்.