ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உயர் நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சட்டமா அதிபர், உயர் நீதிமன்ற விவாதத்தின் போது கூறியுள்ளார்.
அத்துடன் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்சவும் கூறியுள்ளார். அது குறித்து உயர் நீதிமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை எதிர் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என சபாநாயர் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 12 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் அமைச்சரவை செயற்பட முடியாதெனவும் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்புத் தொடர்பான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியா தவறா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏழாம் திகதி வழங்கப்படவுள்ளது. ஆனாலும் இரண்டு தீர்ப்புகளும் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.