அமைதியான கவனயீர்ப்பு போராட்டத்தில் எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் கைகளில் ஏந்தியவாறு போராட்டம் இடம்பெற்றது.
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனி முதலாளிமார், தற்போதைய பொருளாதாரச் சுமைகளைக் கருதி சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
இல்லையேல் தேயிலைக் கொழுந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து நிறுத்தப் போவதாகவும் தொழி்ற்சாலைகள் முற்றாக செயலிழக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பள உயர்வு விவகாரத்தில் மலையகத் தமிழ் பிரதிநிதிகள் தொழிற்சங்கங்கள் அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சம்பள உயர்வை வலியுறுத்தி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.