ஆனாலும் விசாரணை நீடித்துச் செல்வதால் எதிர்வரும் எட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போதும் இந்த மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை என்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது எனவும் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
அதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமி்க்க வேண்டும் எனக் கோரும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவரும் நிலையில், 122 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்.