மக்களால் பிரதிநிதிகள், அரசியலமைப்பின் படி செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் அமெரிக்கத் அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் அரசியல் நெருக்கடி குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக மனித உரிமைகளிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தரீக் அகமட் தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகத்தவர்கள். ஏனைய சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் பிரிட்டனின் அமைச்சர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் மனித உரிமை நிலரவம் முக்கியமானதாகக் காணப்படும் முப்பது நாடுகள் தொடர்பான இடைக்கால அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னரே அமைச்சர் தரீக் அகமட் இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லாட்சி. ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாத்து அரசியல் யாப்பின் செயற்பட வேண்டும் என்பது குறித்து இலங்கையில் உள்ள சகல தரப்புக்கும் அறிவுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூடிய விரைவில் இலங்கை அரசியல் பிரதிநிதிகள் இணக்கத்துக்கு வர வேண்டும் என்றும் அமைச்சர் தரீக் அகமட் வற்புறுத்தியுள்ளார்.