தமிழ் மக்களது மேற்குறித்த பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வைக் காண்பதன் மூலமே மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அருட்தந்தை சத்திவேல் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
அண்மைக்காலமாக தொடரும் அரசியல் குழப்ப நிலையினால் பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாக அரசியல் கைதிகள் விவகாரம் மாறியுள்ள நிலையில், இவ்விடயம் குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உட்பட பிரதான பிரச்சனைகளுக்கான தீர்வை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 அளவில், கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ம.சத்திவேல் மேலும் குறிப்பிட்டார்.