இந்த நிலையில் நாளை சமர்ப்பிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்குமா இல்லையா என்பது குறித்து இதுவரை கருத்துக் கூறவில்லை.
மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயக விரோதமானது. ஆனால் ரணில் விக்கிரமசிங்வைத்தான் பிரதமராக மீண்டும் நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.ஒருபோதும் கூறாது என விஜித ஹேரத் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படையாகக் கூறவில்லை ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவு வழங்கப்படும் என தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மகிந்தவை நீ்க்கி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றக் கட்டடத்தில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு ஏற்ப சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற அமர்வைக் கூட்ட வேண்டும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாதென மகிந்த தரப்பு உறுப்பினர் டிலான் பெரரா கூறுகின்றார்.