முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்ததாக முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவளை இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று காலை கண்டாவளைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதாக கிளிநொச்சி செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்டாவளை மகாவித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் அது தொடர்பான நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.