மாகாண ஆளுநர்கள் அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு மைத்திரிபால சிறிசேன கடந்த 31ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கமைய மறுநாள் ஒன்பது மாகாண ஆளுநர்களும் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அதன் பிரகாரம் புதிய ஆளுநர்கள் நியமனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது 9 மாகாணங்களில் 5 மாகாணங்களது ஆளுநர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கையளித்துள்ளார்.
அதனடிப்படையில் மேல்மாகாண ஆளுநராக இருந்த ஹேமகுமார நாணயக்காரவுக்கு பதிலா அஸாத் சாலியும் மத்திய மாகாண ஆளுநராக இருந்த பீ.பி.திஸாநாயக்கவுக்கு பதிலாக மைத்திரி குணரத்னவும் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த றோஹித்த போகொல்லாகமவுக்கு பதிலாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வட மத்திய மாகாண ஆளுநராக இருந்த எம்.பி.ஜயசிங்கவுக்கு பதிலாக சரத் ஏக்கநாயக்கவும் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக இருந்த கே.சீ. லாகேஸ்வரனுக்கு பதிலாக பேஷல ஜயரத்ன பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஏனைய மாகாணங்களான தென், வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என இலங்கை ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.