வசாவிளான் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நகரை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தை பின்னால் வந்த தனியார் பேருந்து ஆலடி சந்தியில் முந்திச் சென்று வழமறித்ததுடன், தனியார் பேருந்து நடத்துனர் அரச பேருந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேருந்துகளும் போட்டியாக வேகமாக பயணிதடததாகவும், அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து சாரதி தாக்கப்பட்டார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்ததாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.
பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.