இதனடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குவதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 426 ஆண் கைதிகளும் 50 பெண் கைதிகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கான விசாரணையை நடத்தி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திய போதும் இதுவரை எவ்வித தீர்வும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.