வடமாகாண மீன்பிடி இணையத்தின் ஒன்றுகூடல் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3. 30 அளவில் யாழ்ப்பாணம் யாழ்பாடி விருந்தினர் விடுதியில் மாகாண மீனவர் இணைய தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
முல்லைத்தீவு, மன்னார், பள்ளிக்குடா பூநகரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் இந்த செயற்பாடு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட்ட நான்கு மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து தீர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக இணைய முகாமைத்துவ செயலணி ஒன்றினூடாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளையும் அழைத்து தீர்க்க முயற்சிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க தலைவர் கேமன் குமார, சிறப்பு விருந்தினராக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க யாழ்ப்பாண தலைவர் இ.முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.