அதேவேளை, தமிழ் மக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
தமிழ் மக்ளின் வாக்குகளைப் பெறும் நோக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையைப் பிளவுபடுத்தும் புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் புதிய அரசியல் யாப்பை ஏற்கவில்லை எனவும் டிலான் பெரேரா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது எனவும் சமஸ்டி ஆட்சி கிடைக்கும் எனவும் கூறி தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றார். ஆனால் எதுவுமே சாத்தியப்படாது என ரணில் விக்கிரமசிங்கவுக்கே புரியும். அத்தோடு ஜே.வி.பி கூட ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் டிலான் பெரரா கூறியுள்ளார்.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சி தவிர்ந்த வேறு கட்சிகளும் ஏனைய தமிழ் கட்சிகளும் பொது அமைப்ப்புக்களின் பிரதிநிதிகளும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஈழத் தமிழர்களின் இறைமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி ஆகியவற்றை புதிய அரசியல் யாப்பு உறுதிப்படுத்தவில்லையென முன்னாள் முதலமைச்சா் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவை மற்றும் பல தமிழ் பிரமுகர்களும் கூறியுள்ளனர்.
அதேவேளை, மகிந்த ரரஜபக்ச தரப்பு, ஜே.பி.வி. மற்றும் பௌத்த சிங்கள அமைப்புகள், சிங்கள ஊடகங்களில் புதிய யாப்பு இலங்கையைப் பிளவு படுத்தப்போவதாகக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்வதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.