நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
மாகாணசபைத் தேர்தலை புதிய முறையில் நடத்துவது சாத்தியமற்றதாக காணப்படுமாயின் பழைய தேர்தல் முறையிலேயே மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் எனவும் புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுள் இணைத்துக் கொள்ள வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது. சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்கே அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றது. இந்த புதிய அரசியலமைப்பு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
முதலில் அரசாங்கம் முறையாக இடம்பெற வேண்டிய தேர்தல்களை நடத்த வேண்டும். அதன் பின்னரே ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம் என அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.