தாக்குதலுக்கு இலக்கான மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக கூர்மை செய்தித் தளத்திற்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை,
வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தைக் காணவில்லை எனத் தெரிவித்து தனது பிள்ளை மீது அதிபர் தனது அறையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதுவரை ஓமந்தை பொலிஸார் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் தனது பிள்ளைக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள தனது மகளுக்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.