இவ்வாறு பாதிகக்கப்பட்டுள்ள தமக்கு இலங்கை அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட விவசயாகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை, கடும் மழையினால் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், இதுவரை எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பான மதிப்பீடுகள் கிடைக்கவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவித்தி உதவி ஆணையார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் பற்றிய மதிப்பீடுகள் கிடைத்ததும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கமநல அபிவித்தி உதவி ஆணையார் அலுவலகம் கூறியுள்ளது.