அந்த உத்தேச அரசியல் யாப்புத் திருத்தங்களில் மாகாணங்களுக்கு சம அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. ஒற்றையாட்சிப் பண்பு மாறவில்லை என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
மாகாண சபைகளை பலப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம். இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கு ஏற்ற முறையில் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு காணி, பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சி பொய்ப் பிரச்சாரங்களை செய்வதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்துக்கான கௌரவம, அந்தஸ்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கரியயெல்ல உறுதியளித்தார்.
அதேவேளை, ஒற்றையாட்சி முறை மாற்றப்பட்டு ஒருமித்த நாடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டிப் பண்பு அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் கூறி வருகின்றார்.
ஆனால் புதிய அரசியல் யாப்புக்கான வரைபில் ஒற்றையாட்சிக் கோட்பாடு மாறவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.