வீட்டின் முன்பகத்தில் நிறுத்தியிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத முகமூடி நபர்களினால் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இலங்கைப் பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
நாயன்மார்கட்டில் இடம்பெற்ற தாக்குதலில் வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனாலும் வீட்டின் மதிலால் ஏறி வளவுக்குள் பாய்ந்து வீட்டுக்குள் சென்ற முகமூடி நபர்கள் தாக்குதல் நடத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
வாள்வெட்டுக்குழுக்கள், மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்கள் மீது பொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லையென யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த வன்முறைக் குழுக்களின் பின்னணியில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இருப்பதாகவும் இலங்கைப் பொலிஸாரும் அதற்கு ஆதரவு என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.