மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த நடவடிக்கை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் அமைச்சர் தலதா அத்துகோரள உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, மனித உரிமை விவகாரங்களிலும் பொறுப்புக் கூறும் விடயத்திலும் இலங்கை அரசாங்கம் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என ஜெனீவா மனித உரிமைச் சபையின் சட்டப்பிரிவுத் தலைவர் மோனா ரிஷ்மவி அமைச்சர் தலதா அத்துகோரளயிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இருவரும் சந்தித்துப் பேசிய விடயங்கள் எதுவும் முழுமையாக ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
அதேவேளை, வெளியுறவு அமைச்சர் திலக்மரப்பன அமைச்சின் உயர் அதிகாரிகளும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவென்று விரைவில் ஜெனீவாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அமைச்சின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் ஜெனீவா மனித உரிமைச் செயற்பாடுகளில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லையென முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
நடந்தது தமிழ் இனப்படுகொலைதான் என்று சர்வதேசத்துக்கு நிரூப்பிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.