ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஆரம்ப கட்ட வேலையுடன் அந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
எனினும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த தூபியை பல்கலைக்கழக மாணவர்கள் முழுமைப்படுத்தியுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவுத்தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவு செய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.