இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச்செய், இல்லாமல் செய்த ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் வழங்கு ஆகிய கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இப்போராட்டத்தில் ஆசிரியர் சங்க தலைவர் மகிந்த ஜெயசிங்க உள்ளிட்ட சங்கத்தின் அதிபர்கள் மற்றும் ஆசியரியர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேவேளை இக் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.