அமெரிக்க, இலங்கை ஆகிய இரு நாடுகளின் கடற்படைச் செயற்பாடுகள், கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான ஒத்துழைப்புகள், முக்கியத்துவங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்தபோது கூறியிருந்தார்.
இந்த நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் குழு ஒன்று நேற்று புதன்கிழமை அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ஜெயந்த சில்வா, அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் ஹெஸ் ஆகியோரும் அமெரிக்கத் தூதுவர் தலைமையிலான குழுவுடன் சந்தித்து உரையாடியுள்ளனர்.