தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்கள், மடுக்கந்தை விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி அமுனுபுரவின் நெறிப்படுத்தலில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்ததாக கூர்மையின் முல்லைத்தீவு செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை முல்லைத்தீவில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தொடர்ச்சியாக விசனம் வெளியிட்டுவரும் நிலையில், நந்திக்கடல் நீரேரியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையைக் கண்காணிக்கச் சென்றவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.