ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றுவருவதாகத் தெரிவித்துச் சென்ற சிறுவன் இதுவரை வீடு திரும்பவில்லை என சிறுவனின் தந்தை கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மகன் தொடர்பாக தகவலறிந்தால் 0779240145 தன்னுடைய தொலைபேசி இலக்கத்துக்கு அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.