ஆனால் அதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் விரும்பவில்லை என்றும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, முக்கிய அமைச்சர்கள் இருவருக்கான நிதி ஒதுக்கீட்டையும் தோற்றகடிக்க கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசவுள்ளதாக கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாளை செவ்வாய்க்கிழமை ஐந்தாம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீர இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளர்.
அதேவேளை, மாகாணசபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து வருகின்றனர்.
முன்னர் நடைமுறையில் இருந்து விகிதாசார தேர்தல் முறைப்படி மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கேற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தொகுதி அமைப்பாளர்களிடம் கோரியுள்ளார்.