வெள்ளிக்கிழமை காலை 9.30க்கு நாடாளுமன்றம் கூடியது. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர். தயாசிறி ஜயசேகர ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. ஜெனீவா மனித உரிமைச் சபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளித்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையுடன் சர்வதேச நாடுகள் சிறந்த உறவைப் பேணுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறினார்.
அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையின் பிடியில் இருந்து இலங்கை விலக வேண்டும் என மகிந்த தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.