கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை விசாரணை இடம்பெற்றது.
விசாரணை இன்று நிறைவு பெறவில்லை என்பதால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி புதன்கிழமையும் விசாரணை இடம்பெறும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாணவர்களைக் கடத்திச் சென்று அவர்களது பெற்றோரிடம் கப்பம் பெற்றார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் முறையிட்டிருந்தனர்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஆண்டு பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.