மொத்த செலவில் 85 வீத தொகைக்கான கடனை சீன எக்சிம் வங்கி வழங்கவுள்ளது.
சீனாவிடம் இருந்து மேலும் பல இலகு கடன் உதவித் திட்டங்களை இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்க தெரிவித்தார்.
கொழும்பு போட் சிற்றித் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதாகவும் முக்கியமான திட்டங்கள் பூர்த்தியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சீனாவின் 60 கோடி நிதி உதவியுடன் இலங்கை முழுவதிலும் உள்ள 13 வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டிடங்களை நிர்மானித்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கைஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வைத்தியசாலைக் கட்டிடங்களுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கென மேலும் 60 கோடி நிதியும் இதனூடாக கிடைக்கவுள்ளதாக இலங்கைச் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஷல் காஷிம் தெரிவித்தார்.