வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, அதனை தோற்கடிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறி வருகின்றது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பு கூறிவரும் நிலையில், வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்கம் இல்லையென திலங்க சுமதிபால கூறியுள்ளார்.
அதேவேளை, கட்சியின் மூத்த உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி வருகின்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றும், மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு மாறானவையெனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.