தொடர்ச்சியாக இழப்புக்களை எதிர்நோக்கிய ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பத்து வருடங்கள் சென்றுவிட்ட பின்னரும் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளுக்கு காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக பலர் 28 வருடங்களுக்கும் மேலாக தமது நஷ்டஈட்டு கொடுப்பனவுகளுக்கு காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
போர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மன்னார் மாவட்ட மக்கள், குறித்த பாதிப்புகளுக்குரிய நஷ்டஈடுகளை வழங்குமாறு கோரி புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சுக்கு உட்பட்ட அதிகார சபைகளுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் கொழும்பில் இருந்து நிதி கிடைக்கவில்லையென அதிகாரிகள் மக்களிடம் கூறியுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட மக்களின் நஷ்டஈட்டு கொடுப்பனவு தொடர்பாக இலங்கை அரசாங்கமும் அதன் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சும் அக்கறையின்றிச் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.