இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை விளக்கமளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே அசிஸ் கையெப்பமிட்டதாகக் கூறியுள்ளார்.
ஜெனீவாவுக்குச் சென்றிருந்த அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் அரசின் உயர் அதிகாரிகளும் அதனை அறிந்திருந்தாகவும் இரகசியமாக எதுவுமே இடம்பெறவில்லையென்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலங்கைப் பிரதமரின் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ தித்தவெல, ஜெனீவா தீர்மானத்துக்கான இணை அனுசரணை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.
அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு அமைவாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம், 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயங்கள் தொடர்பாகவும் இணை அனுசரணை வழங்கப்பட்ட விவகாரம் குறித்தும் தனக்கு எதுவுமே தெரியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூற முடியாதெனவும் அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
30/1 தீா்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க அலுவலகம் ஒன்றை கொழும்பில் அமைக்க வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபை கோரியிருந்து.
எனினும் அது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உரிய பதில் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.