சில தீய சக்திகளின் பின்னணியில் மதக் கலவரங்கள் தூண்டப்படுவதாகவும் அதற்கு சகல மதத்தவர்களும் இடமளிக்கக் கூடதெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
மன்னார் மண்ணில் மதங்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்போம். காலமாக பேணி வரும் உறவுகளை மத பிரச்சினையால் பிளவுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாதைகள், சுலோக அட்டைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
மதம் என்ற அடையாளத்திற்காக தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை இழந்துவிடக் கூடாது என்றும் வரலாற்று ரீதியாக மன்னாரில் நிலவிய ஒற்றுமையை மேலும் கட்டியெழுப்ப வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் சைவம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மத ஒற்றுமைக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் போராட்டம் இடம்பெற்றது. எதிர்காலத்தில் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.