ஆனால் இதுவரை எந்த ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. குற்றவாளிகளில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவுமில்லை என்று ஊடக அமைப்புகளின் சார்ப்பில் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டி்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை ஊடக அமைப்புகளின் புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளாமல் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இறுதி நேரத்தில் நிகழ்வில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்த பத்திரிகை ஆசிரியர்களை நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தின் வெளியில் உள்ள களரியில் அமருமாறு ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பத்திரிகை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் பத்திரிகை ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கோரியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.