கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் விசாரணை நடத்தப்படுவதாகவும் யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களோடு இவர்களுக்குத் தொடர்புள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
சந்தேக நபர்கள் எட்டுப்பேரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை. கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் அப்பாவிகள் எனவும் ஆவாக்குழுவுடன் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, வவுனியா, கோவில்குளம் பிரதேசத்தில் இளைஞர் குழுவினால் கார், முச்சக்கரவண்டி ஆகிய இரண்டு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் இருந்த இளைஞர்களே அடித்து நொருக்கியதாகவும் இதனால் வாகனச் சாரதிகளுக்கும் இளைஞர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
வவுனியாவில் உள்ள இலங்கைக் குற்றத்தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான வனமுறைகளுக்கு இலங்கைப் பொலிஸாரே காணரம் என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.