ஆனால் தந்தையின் பெயரை வைத்து அரசியல் செய்வோர் ஜனாதிபதி வேட்பாளராக முடியாதெனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கா கூறியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க இருக்கும்போது கட்சியின் தலைமைப் பதவிக்கு எவரும் முயற்சிக்கக் கூடாதெனவும் ரவி கருணாநாயக்க மட்டக்களப்பில் நேற்றுத் திங்கட்கிழமை கூறியிருந்தார்.
அதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அம்பாந்தோட்டையில் வைத்துப் பதிலளித்திருந்த அமைச்சர் சஜித் பிரேமதாசா, அப்பாவை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால் வங்கியில் கொள்ளையிட்ட பணத்தை வைத்து அரசியலில் ஈடுபடக்கூடாது என்றார்.
இரு அமைச்சர்களிடையேயும் கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலும் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன.
மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் லாபத்துக்காக சஜித் பிரேமதாசாவை பிரதமராக்க முயற்சிக்கிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்துவதே ஜனாதிபதியின் பிரதான நோக்கமென்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவை அதிகரிக்க மகிந்த ராஜபக்ச தரப்பும் முற்படுவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குமிடையே ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் முரண்பாடுகள் நீடித்துச் செல்லுகின்றன.