ஐந்து மோட்டார் சைக்கிள்கள், கப் ரக வாகனம் ஒன்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை போத்தல் மற்றும் கலன்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க வேண்டாமென இலங்கையில் உள்ள சகல எரிபொருள் நிலையங்களுக்கும் இலங்கைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் தலைநகர் கொழும்பு அதன் புநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளதாக அமெரிக்கச் செய்தி நிறுவனமான ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஐ.எஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதுவுமே கூறவில்லை.
எனினும் உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இருக்கலாமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.