இறந்தவர்களின் சடலங்களை, உறவினர்கள் கொழும்புக்கு வருகை தந்து, அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தூதரகம் கூறியள்ளது.
சீன விஞ்ஞான அகடமியைச் சேர்ந்த ஐந்துபேர் காயமடைந்து மேலதிகச் சிகிச்சைக்காக சீனாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சீனாவின் ஷின்ஹூவா செய்தி நிறுவனமும் கூறியுள்ளது.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களையடுத்து இலங்கையிலுள்ள சீனத் தூதரகம், சீன நிறுவனங்கள், சீனாவின் ஒத்துழைப்புடன் இடம்பெறும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் சீனப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம், சீன அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பாதுகாப்பு நிலைமைகள் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும் சீன நலன்களுக்கு மேலதிக பாதுகாப்பு அவசியமெனவும் சீனா கூறியுள்ளது.
அதேவேளை, இலங்கையில் பணியாற்றும் சீனப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.