ஆனால் இந்தக் கைது திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கையென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர். மாணவர் ஒன்றியக் கட்டடம், விடுதி ஆகிய பகுதிகளில் பெருமளவு இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இரண்டு மணித்தியாளங்களுக்கும் அதிகமாக தேடுதல் இடம்பெற்றதாகவும் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு மாணவர்களையும் இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்ய இலங்கைப் பாதுகாப்பு அமைச்சிடம் கோப்பாய் பொலிஸார் அனுமதி கோரியுள்ளனர்.
அதுவரைம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்கால் படுகொலைகளின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை இராணுவத்தினர் இரு மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக யரழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது.