இந்த நிலையில் தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவரான ஸஹ்ரான் ஹாசீம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க, இந்தியாவில் இருந்து வெளியாகும் தி ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணம் மன்னாரிலிருந்து, தமிழ்நாட்டுக் கடல் வழியாகச் சென்றிருக்கலாமென மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் ஊடாக இந்தியாவின் பெங்களூர், காஷ்மீர் ஆகிய நகரங்களுக்கும் ஸஹ்ரான் ஹாசீம் சென்றிருக்கலாமெனவும் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஏழு பில்லியன் ரூபா சொத்துக்களையும், 140 மில்லியன் ரூபா பணத்தையும் முடக்கி வைப்பதற்கு இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு , கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற உத்தரவையும் பெறவுள்ளது.
கொழும்பு ஷங்ரிலா தற்கொலைக் குண்டுதாரி மொகமட் இல்ஹாமுக்குச் சொந்தமான, வெல்லம்பிட்டியவில் உள்ள செப்புத் தொழிற்சாலை, ஸஹ்ரான் காசீமின் தெமட்டகொட ஆடம்பர வீடு, காணிகள், இரத்தினக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை, நீதிமன்றக் கட்டளையைப் பெற்று இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.