பேராசிரியர் கந்தசாமி கதிர்காமநாதன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற விரிவுரையாளராவார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இ.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
உபவேந்தராக கடமையாற்றிய விக்னேஸ்வரன் தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமையினாலேயே பதவி நீக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.