இஸ்லாமியவாதிகளினால் ரஷியா எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலகவிடம் எடுத்துக் கூறியதாக இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரஷியாவில் பரவிய வகாபியிசம் ரஷியாவில் ஏற்படுத்திய பிரச்சினைகள், அதன் தீவிரவாதத் தன்மைகள் போன்றவற்றை எதிர்கொண்ட முறைகள் பற்றி பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ் இந்தச் சந்திப்பில் எடுத்து விளக்கினார்.
ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்றுள்ளதால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளது எனவும், ஆனாலும் எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தூதுவர் தயான் ஜயதிலகவும் கூறியுள்ளார்.
அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், 1991 ஆம் ஆண்டுக்கு முன்னர் சோவியத் யூனியன் அரசு செயற்பட்ட காலத்தில் கே.ஜி.பி என அழைக்கப்பட்டு பின்னர், எவ்.எஸ்.பி ரஷிய சமஷ்டிப் புலனாய்வு சேவை அமைப்பின், பிரதி பணிப்பாளராகத் திகழ்ந்தார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை டி.கே.ஆர் எனப்படும், புலனாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். தற்போது ரஷிய இராணுவத்தின் ஜெனரல் தரநிலையிலும் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.