இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடிப் பிரதேசத்தில் கைதான இளைஞர்கள் சிலர் மடக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு விவாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சிலாபத்தில் அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியரான சிலாபம், ஜயபிம என்ற பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவியொருவர் இராணுவத்தினரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரும் வெலிமடை, திமுதுகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நாரஹோன்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை இராணுவத்தினர் நடத்திய தேடுதலில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தேவையற்ற கைது நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் கேட்டுள்ளனர்.
ரவூப் ஹக்கீம், ரிஷாட், பதியுதீன், பாயிஸ் முஸ்த்தபா, அமீா் அலி, ஏஎச்எம் பெள்சி உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்படும் இளைஞர்களை சாதாரண சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறும் பிணையில் விடுவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்ற சனிக்கிழமை மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.