ஒக். 13 10:02
(வவுனியா, ஈழம்)
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை ஏற்க முடியாதெனவும், தேர்தல் ஒத்திவைக்கப்படும் முடிவை தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பதாகவும் கூறிய ஆணைக்குழுவின் தலைவர், செப்டம்பர் மாதத்திற்கு பின்னர், தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.